இந்நிலையில், செப் 23 ( இன்று ) இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கல பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்துள்ளது. 31 வயதான அபினவ் பிந்த்ரா செப் 23 (இன்றுடன்) ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும் அபினவ் பிந்த்ரா, தனது கடைசி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்துள்ளார்.
மேலும் அணிகள் பிரிவிலும் அவர் வெண்கல பதக்கம் வென்றார். அபினவ் பிந்த்ரா, ரவிக்குமார், சஞ்சீவ் ராஜபுத் அடங்கிய இந்திய அணி 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், குவைத்தின் அப்துல்லாவை நேருக்கு நேர் மோதினார். முதலிரண்டு செட்டை 12–10, 11–2 என கைப்பற்றிய கோசல், மூன்றாவது செட்டை 12–14 என இழந்தார். கடைசி இரண்டு செட்டிலும் சொதப்பிய கோசல் 8–11, 8–11 என பறிகொடுத்தார். முடிவில் கோசல் 12–10, 11–2, 12–14, 8–11, 8–11 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.