இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே இதுதான் மோசம்… சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:58 IST)
ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த சீசன்களிலேயே இந்த ஆண்டு தொடர்தான் மோசம் என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலயில் வரணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்’ இந்த தொடரில் நடந்த 59 போட்டிகளையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். எண்ணற்ற வீரர்கள் தங்கள் முந்தைய ஃபார்மைக் கூட வெளியிட முடியாமல் திணறி வருகிறேன். இத்தொடரின் பல போட்டிகளில் சம்பந்தமில்லாத முடிவுகளும், ஏற்ற இறக்கங்களும் ஏற்பட்டன. என்னைப் பொறுத்தவரை இதுதான் மோசமான ஐபிஎல் சீசன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்