இந்திய அணியின் சாதனை மன்னனான சச்சினுக்கு நேற்று 42 ஆவது பிறந்த நாள் ஆகும். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் சச்சினுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. மேலும் பிறந்த நாளை தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் மிக எளிதாக கேக் வெட்டி கொண்டாடினார் சச்சின்.
சச்சின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம்பெற்றுள்ளார். அவர் மீதான மதிப்பும் மரியாதையும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல. சச்சின் தற்போது ஐபிஎல் மும்பை அணியின் ஆலோசராக உள்ளார். மேலும் ஐ எஸ் எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கேரளா பிளாஸ்டர்ஸ் உரிமையாளராகவும் செயல்படுகிறார்.