பிரதமரின் ” செல்பி வித் டாட்டர் “ அழைப்பு: சாராவுடன் செல்பி எடுத்தார் சச்சின் தெண்டுல்கர்

சனி, 4 ஜூலை 2015 (09:32 IST)
இந்திய அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் தனது செல்ல மகள் சாராவுடன் ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
நாட்டில் பெண் குழந்தைகளின் அவசியத்தை ஊக்குவிக்கும் விதமாக அனைவரும் தன் மகளுடன் ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திடுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
 
இந்நிலையில் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் தன் மகள் சாராவுடன் ஒரு செல்பியை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பிரதமரின் இந்த அழைப்பிற்கு செல்பி வித் டாட்டர் என பெயரிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்