அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்: சேவாக் கணிப்பு

சனி, 14 மே 2022 (17:08 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டனாக தற்போது தோனி இருந்துவரும் நிலையில் புதிய முயற்சியாக ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் அந்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது
 
இதனை அடுத்து விரைவில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தோனி இன்னும் மூன்று அல்லது நான்கு சீசன்களில் விளையாடினால் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு நீண்டகால கேப்டனாக வரக்கூடிய வாய்ப்பு ருத்ராஜ்க்கு இருப்பதாக நான் நினைக்கிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்
 
அதிர்ஷ்டம் ஒன்றை தவிர தோனியின் அனைத்து குணங்களும் ருத்ராஜிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்