டாஸை இழந்ததும் ரிஷப் பண்ட் அழுகை… இணையத்தில் வைரல்!

சனி, 9 அக்டோபர் 2021 (10:57 IST)
நேற்று ஐபிஎல் லீக் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் நடந்தன. இதில் ஒரு போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸும் ராயல் சேலஞ்சர் பெங்களூருவும் மோதின.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிந்துவிட்டன. நேற்று நடந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் புள்ளிப்பட்டியலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்நிலையில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டிருந்தது.

இந்த போட்டியின் டாஸில் ஆர்சிபி கேப்டன் கோலி டாஸ் வென்றார். அப்போது மற்றொரு கேப்டனான ரிஷப் பண்ட் போலியாக அழ ஆரம்பித்தார். அதைப் பார்த்து கோலி சிரிக்க மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அதை திரையில் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். இது சம்மந்தமான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்