ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – காலிறுதியில் பி வி சிந்து வெளியேற்றம் !

சனி, 27 ஜூலை 2019 (09:11 IST)
ஜப்பானில் ஓப்பன் பேட்மிண்டன் போட்டித்தொடரின் காலிறுதியில் இருந்து பிவி சிந்து வெளியேறியுள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி  முதல் டோக்கியோவில் நடந்துவரும் ஜப்பான் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய் பிரனீத், ஹெச்.எஸ்.பிரனாய், சத்விக் சாய்ராஜ், ரான்கி ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்தப் போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யமுகுச்சி 21-18, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்க அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்