தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்துக்குக் குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதன், 30 ஜூலை 2014 (11:45 IST)
20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்ற சதீஷ் சிவலிங்கம், ரவி கட்லு, பூனம் யாவதவ், ஸ்ரேயாசி சிங் மற்றும் ஆசாப் முகமத் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இப்போட்டியில் இவர்கள் வெற்றிப் பெற்றதற்காகவும் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார். 
 
இந்தச் சாதனைகள் மூலம் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்றும் இதனால் சர்வதேச அளவில் நமது நாட்டின் தேசியக் கொடி மிக உயரத்தில் பறப்பதை இது உறுதி செய்கிறது என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்