ஆனால், இந்திய அணி கோப்பையை மொஹ்சின் நக்வி வாங்க மறுத்துவிட்டது என்று தெரிந்தவுடன்,மொஹ்சின் நக்வி மேடையிலிருந்து கோப்பையையும், பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு தனது ஹோட்டல் அறைக்கு சென்றதாக தெரிகிறது.
நாங்கள் வெற்றி பெற்ற கோப்பையையும், பதக்கங்களையும் மொஹ்சின் நக்வி எடுத்துக்கொண்டு, தனது ஹோட்டல் அறைக்கு செல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் விளையாட்டுத் தன்மைக்கு விரோதமான செயல்" என்று இந்திய அணி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி ஆகா, இந்தியாவின் செயலை கடுமையாக விமர்சித்தார். "இந்தியா எங்களுடன் கை குலுக்க மறுத்ததும், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததும், எங்களை மட்டும் அவமதிக்கவில்லை, கிரிக்கெட் விளையாட்டையும் அவமதிக்கிறது" என்று அவர் கூறினார்.