339 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் சர்மா அவுட் ஆனார். பின்னர் 3வது ஓவரில் கேப்டன் கோஹ்லி, 9வது ஓவரில் தவான், 13வது ஓவரில் யுவராஜ்சிங், 14வது ஓவரில் தோனி என ஐந்து முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். ஓரளவு அடித்து ஆடி வந்த பாண்டியாவை ஜடேஜா ரன் அவுட் ஆக்கியதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.