வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு… தள்ளி வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்!

வெள்ளி, 5 மார்ச் 2021 (10:15 IST)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் சிலருக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமீயர் லீக்குக்கு கிடைத்த ஆதரவை அடுத்து எல்லா நாடுகளும் தங்கள் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்றுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக். இதில் பல நாட்டு வீரர்களும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடரின் இடையில் பல வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்