ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்கலாமா? பாகிஸ்தான் வீரர்..!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:37 IST)
நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்  கிண்டல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஆலோசிக்க  முக்கிய கூட்டம் கூடியது. இதில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

முன்னாள் கேப்டன் யூனிஸ்கான் எண்ணங்கள் நல்லதாக இருக்கும். அது எனக்கு சிறப்பான நம்பிக்கையை அளித்தது.  உண்மையில் அது போன்ற ஒரு கேப்டன் தான் வீரர்களை மெருகேற்ற முடியும். நீங்கள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டு ஒழுக்கம் உள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது நான் பேசுவது உங்கள் எண்ணத்தைப் பற்றி என்று அப்துல் ரசாக் பேசினார்.  

இதை அந்த கூட்டத்தில் இருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ரசித்து கை தட்டினர். இந்த கருத்து தவறான நோக்கத்தில் சொல்லப்பட்டது என்று அப்துல் ரசாக்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்