தேசிய விளையாட்டு போட்டி: தொடர்கிறது தமிழகத்தின் தங்க வேட்டை

ஞாயிறு, 8 பிப்ரவரி 2015 (09:02 IST)
கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில், விஜய்குமார் 2 தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
போட்டியின் 7 ஆவது நாளில் நடைபெற்ற 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல்  போட்டியில் விஜய்குமார், பெம்பா தமாங், குர்பிரீத் சிங் ஆகியோருடன் சேர்ந்து விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
 
மேலும் தனிநபர் பிரிவிலும் விஜய்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 100 மீட்டர் பிரஸ்டிரோக் நீச்சல் பிரிவில் பங்குபெற்ற சந்தீப் செஜ்வால் 4 ஆவது தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார். 
தமிழக அணி இதுவரை 9 தங்கம், 5 வெள்ளி, 14 வெண்கலம் ஆகியவற்றுடன் 7 ஆவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்