அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கால்பந்து ஜாம்பவான்!

வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:49 IST)
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுபவர் மாரடோனா. அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வைக்காதவர். தற்போது 60 வயதாகும் மாரடோனா கடந்த 2-ந் தேதி பியூனஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்