ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி: பிரதமர் அனுமதிக்க முதல்வர் வேண்டுகோள்!

திங்கள், 17 அக்டோபர் 2022 (18:08 IST)
ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட பிரதமர் அனுமதிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலியின் பதவிக்காலம் முடிந்த நிலையில் ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிட பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்
 
கங்குலி அரசியல் தலைவர் கிடையாது என்றும் அதனால் இதனை அரசியல் ஆக்காமல் கிரிக்கெட்டுக்காக இதனை அவர் செய்ய வேண்டும் என்றும் கங்குலி நமது நாட்டு பெருமிதம் என்றும் இதை இந்திய நாட்டின் குடிமக்கள் சார்பாக நான் பிரதமரின் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
 
ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்