கோலி இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும்… வி வி எஸ் லக்‌ஷ்மன் அறிவுரை!

வியாழன், 11 மார்ச் 2021 (07:59 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 போட்டிகளில் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் என விவிஎஸ் லஷ்மன் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் லஷ்மன் ‘விராட் கோலி ஒரு பிரமாதமான ஒரு உயர்தர பேட்ஸ்மன், தனித்துவமான பேட்ஸ்மேன். அவர் இன்னும் அதிரடியாக விளையாடினால் அபாயகரமான வீரராக திகழ்வார். அவருக்குப் பின்னால் ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட், பாண்ட்யா எல்லாம் இருக்கும் போது அவர் நிதான ஆட்டம் ஆடுவது தேவை இல்லாதது. அதே போல தவானைக் கழட்டிவிட்டு கே எல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக இறக்கவேண்டும்.

புவனேஷ்வர் குமார் காயத்தில் மீண்டுள்ளார். அவர் டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறுவது அவசியம். கடந்த காலங்களில் அவர் ஒரு மேட்ச் வின்னராக இருந்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்