2வது ஒருநாள் போட்டி: அரை சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்!

புதன், 9 பிப்ரவரி 2022 (16:09 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் 49 ரன்களில் அவுட் ஆகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்றைய போட்டிகள் இந்தியா இதுவரை 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. சூரியகுமார் யாதவ் 48  ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய நிலையில் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்