அதைக் கேட்டதும் கோபமடைந்த கபில் தேவ், ’நீங்க இந்தியர்தானே, இந்தியராக இருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். எந்த நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் அரசிடம் விட்டு விடுவோம். விளையாட்டு வீரர்கள் விளையாட்டை மட்டுமே பார்க்க வேண்டும்’ என கடுமையாக பேசினார். பின்னர், இந்திய அணியினரின் சீருடையை கபில்தேவ் வெளியிட்டார்.