ராகுலுக்கு தலைமைப் பண்புகள் இல்லை… அஜய் ஜடேஜா விமர்சனம்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (15:07 IST)
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் மீது முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விமர்சனம் வைத்துள்ளார்.

கே எல் ராகுல் தலைமையில் பஞ்சாப் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. அந்த அணியின் கேப்டனாக ராகுல் பொறுப்பேற்றதில் இருந்தே தோல்விகளை சந்தித்து இரு சீசன்களிலும் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரை 25 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் தலைமையில் பஞ்சாப் அணி 11 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுலின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரரும் வரணனையாளருமான அஜய் ஜடேஜா விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘ராகுல் மென்மையான போக்கைக் கடைபிடிக்கிறார். அமைதியாக பேசுகிறார். அவரால் நீண்டகாலம் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் அதனால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. அவர் பொறுப்பை தோள்களில் சுமப்பதில்லை. அவர் கேப்டனாக செயல்பட்டால் அவர் மீது விமர்சனங்கள் வரும்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்