இது தொடர்பாக அவர், தீபிகா பல்லிக்கல்லுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் எங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்கள். உங்கள் சாதனைக்காகத் தமிழக மக்களின் சார்பில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களையும் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் வாழ்த்துவதோடு, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை அடைய, இந்தியாவின் சார்பிலும் தமிழகத்தின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.