ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: மும்பை - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி டிரா

வெள்ளி, 27 நவம்பர் 2015 (16:21 IST)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிவடைந்தது.
 

 
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் மும்பை - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியின் 25ஆவது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோல் அடித்து முன்னிலை அடைந்தது. பின்னர் 89ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் ஜெர்மன் கோல் அடித்து இந்த போட்டியை சமன் செய்தார்.
 
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், கேரள அணி 11 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்