2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இன்று குவாலிபையர் 1 போட்டி நடைபெற உள்ளது. பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே சண்டிகர் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனை அடுத்து, பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்றும், இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணிவுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணி: ப்ரியன்ஷ் ஆர்யா, ப்ரப்ஸிம்ரன் சிங், ஜோஷ் இங்க்லிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நெஹல் வாதேரா, சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாயினிஸ், அஸ்மதுல்லா ஓமர்ਜ਼ாய், ஹர்ப்ரீத் பிரார், கெய்ல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியம் லிவிங்க்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ரூணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யஷ் தயால், ஜாஷ் ஹேஸல்வுட், சுயாஷ் சர்மா