ஐபிஎல்-2022; டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வியாழன், 28 ஏப்ரல் 2022 (23:37 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 41வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஷ் ஐய்யர் 42 ரன்களும்,  ரானா 57 ரன்களும், சிங் 23 ரன்களும் அடித்தனர். எனவெ20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணியில் டேவிட் வார்னர் 42 ரன்களும்,  மார்ஷ் 13 ரன்களும், பூவெல் 33 ரன்களும், படேல் 24 ரன்களும், அடித்தனர்.  எனவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களும் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் யாதவ் 3 விக்கெட்டும், ரானா ,  நரேன் தல 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்