ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் நாளை தொடக்கம்: சாய்னா நேவால் கலந்து கொள்ளவில்லை

செவ்வாய், 17 நவம்பர் 2015 (19:47 IST)
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த தொடரில் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, அஜய் ஜெயராம், பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் 4 பேர் கலந்து கொள்கின்றனர்.


 
 
இந்நிலையில், காயம் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த உலகின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

நாளை நடக்க இருக்கும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மேரினையுடன் விளையாட உள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்