2வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:01 IST)
2வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்தநிலையில் நேற்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 143 ரன்கள் குவித்தார் 
 
இதனையடுத்து 334 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் அந்த அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்