இனி வெளிநாட்டு தொடர்களுக்கு டபுள் பேட்டா – இந்திய வீரர்களைக் குஷிப்படுத்திய பிசிசிஐ !

ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:27 IST)
இந்திய அணி சிறப்பாக செயலபட்டு வருவதை அடுத்து இனி வெளிநாட்டுத் தொடர்களுக்கான தினசரி படித்தொகையை இரட்டிப்பாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாண்டு டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டுத் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் வெளிநாட்டுத் தொடர்களின் போது இந்திய அணி வீரர்களின் படித்தொகையை இரட்டிப்பாகக் கொடுக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் படி இதுவரை 125 டாலர்களாக (சுமார் ரூ 8900) இருந்த தினப்படி 50 டாலர்களாக  (சுமார் 17,800 ரூ) என உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர வீரர்கள் செல்ல பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட், தங்குமிடம் மற்றும் வீரர்களின் லாண்டரி செலவுகளையும் பிசிசிஐ ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்