4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரையும் வென்றது!

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (07:55 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இந்தியா இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலையில் இருந்தது.
 
இந்த நிலையில் நேற்று 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 44 ரன்கள் அடித்தார் 
 
இதனையடுத்து 192 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவரில் 132 இரண்டு ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து இந்திய 59 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதோடு 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்