தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:35 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற  தென்னாபிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இதனை அடுத்து இந்திய அணி சற்று முன் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் ரபடாவின் பந்துவீச்சில் பர்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.
 
 தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பதும், ஜெய்ஸ்வால் 16 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்