நாளை இரண்டாவது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இந்திய அணி?

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த 30ஆம் தேதி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி அதாவது நாளை ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது 
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கேப்டன் நகரில் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்