233 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.. பேட்டிங்கில் விளாசும் ரோஹித் - ஜெய்ஸ்வால்

Mahendran

திங்கள், 30 செப்டம்பர் 2024 (13:53 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் வங்கதேச அணி 233 ரன்களை ரன்களில் சுருண்டுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 
 
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 27ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் 107 ரன்கள் எடுத்திருந்தபோது ம்ழை குறுக்கிட்டது. இதனை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மழை பெய்யவில்லை என்பதால் ஆட்டம் தொடர்ந்தது.
 
இந்த நிலையில், வங்கதேச அணியின் மோனிமல் ஹாக் சதம் அடித்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சோதப்பியதால் அந்த அணி 233 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து, தற்போது ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். 
 
இருவரும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும்  கொண்டிருக்கும் நிலையில், 5 ஓவர்களில் இந்திய அணி 51 ரன்கள் எடுத்துள்ளது, 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்