ரகானே தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டி இன்று ஹராரேவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 39 ரன்கள், முரளி விஜய் 34 ரன்கள்,ரஹானே 33 ரன்கள் எடுத்தனர்.