போலந்து நாட்டில் உள்ள பிட்காசஸ் நகரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவின் நீரஜ் யாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.