62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:10 IST)
62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷான் 89 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்களும் அடுத்தனர்.
 
இந்த  நிலையில் 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இஷான் கிஷான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்