20 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (22:18 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதை அடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின்  மிட்செல் மிக அபாரமாக விளையாடி சதமடித்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 
 
இந்த நிலையில் 274 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில்  ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதன் பிறகு விராட் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 48 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 20 வருடங்களில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வெற்றி பெறாத நிலையில் இருபது வருடங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்