66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நியூசிலாந்து: தொடரை வென்றது இந்தியா!

புதன், 1 பிப்ரவரி 2023 (22:11 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு அனைத்து விக்கட்டையும் இழந்ததை அடுத்து இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது சுப்மன் கில் அபாரமாக விளையாடி 126 ரன்கள் எடுத்தார். 
 
இதனை அடுத்து 235 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணி 66 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது,. ஹர்திக் பாண்டியா மிக அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 
 
அர்ஷ்தீப்சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியை அடுத்து இந்தியா 2-1  என்ற கணக்கில் தொடர வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்