டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளரானதற்கு அவரது மகன்தான் காரணம்… கங்குலி கேலி!

செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிராவிட் நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ஒரு நாள் டிராவிட்டின் மகன் எனக்கு போன் செய்தார். என் அப்பா வீட்டில் மிகவும் கண்டிப்பானவராக இருக்கிறார். அவருக்கு வெளியில் ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கூறினான். நான் உடனே டிராவிட்டிடம் இந்திய அணியில் இணைவதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கூறினேன்’ என்று நகைச்சுவையாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்