423 ரன்கள் குவித்த இங்கிலாந்து: இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பா?

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (07:36 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜோ ரூட் மிக அபாரமாக விளையாடி 121 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 3வது நாள் ஆட்டத்தில் விளையாடும் இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட 500 ரன்களை எடுத்து விட்டால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி இந்த போட்டியை டிரா செய்ய முயற்சிப்பார்கள் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர் 
 
நேற்றைய போட்டியில் ஷமி, சிராஜ் மற்றும் ஜடேஜா அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்