கிறிஸ்கெய்ல் 162 ரன் வீண்: 419 இலக்கை எட்ட முடியாத மே.இ.தீவுகள்

வியாழன், 28 பிப்ரவரி 2019 (08:22 IST)
இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மே.இ.தீவுகள் அணிக்கு 419 என்ற இலக்கை கொடுத்தது இங்கிலாந்து. கிறிஸ்கெய்ல் அபாரமாக விளையாடி 162 ரன்கள் அடித்தும் மே.இ.தீவுகள் அணியால் 389 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து அணி: 418/6  50 ஓவர்கள்
 
பட்லர்: 150 ரன்கள்
மோர்கன்: 103 ரன்கள்
ஹேல்ஸ்: 82 ரன்கள்
 
மே.இ.தீவுகள்: 389/10  48 ஓவர்கள்
 
கிறிஸ்கெயில்: 162
பிராவோ: 61
பிராத்வெயிட்: 50
 
ஆட்டநாயகன்: பட்லர்
 
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மார்ச் 2ஆம் தேதி நடைபெறும். இந்த தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்