அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்: டிவில்லியர்ஸ்

செவ்வாய், 24 மே 2022 (12:09 IST)
ஐபிஎல் உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்கா வீரர் டிவிலியர்ஸ் மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் டிவில்லியர்ஸ். இவர் மிகச் சிறப்பாக விளையாடி நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2023 சீசனில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் 
 
மீண்டும் அவர் பெங்களூர் அணியில் தான் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடங்கியது முதல் அனைத்து சீசன்களிலும் அதிரடி பேட்டிங் செய்து எதிரணிகளை கலங்க வைத்த நிலையில் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்