பாராலிம்பிக் கிராமத்தில் கொரோனா?

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:31 IST)
டோக்யோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கிராமத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல். 

 
ஜப்பானில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்டு 24 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டோக்யோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கிராமத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
 
தொற்றுக்கு உள்ளானவர் விளையாட்டு வீரர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள 70-க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா பாதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்