இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அதிரடி முடிவு..!

புதன், 27 செப்டம்பர் 2023 (14:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இன்று தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்று முன் வரை எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 
 
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஆஸ்திரேலியாவை வாஷ்அவுட் செய்து விடும் என்பதும் ஆஸ்திரேலியா அணி வென்றால் ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்