ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பெண்கள் கபடி அணி இறுதி போட்டிக்கு தகுதி

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:19 IST)
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 18ஆம் தேதி முதல் இந்தோனேஷியாவில் நடந்து வரும் நிலையில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை  27-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை ஈரான் அணி 23-16 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. எனவே இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதவுள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்