17 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் செப், 19 ல் தொடங்கி அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியா தரப்பில் 516 பேர் கொண்ட குழு தென்கொரியா சென்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 28 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பின்னர் கலை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல், தடகளம், கபடி, மல்யுத்தம், பேட்மிண்டன், பளுதூக்குதல், வில்வித்தை, ஹாக்கி போன்ற பிரிவுகளில் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பேட்மிண்டனில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோருக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.