ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!

திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:12 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வரும் நிலையில் இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து தற்போது நேபாள அணி பேட்டிங் செய்து வருகிறது,. சற்று முன் வரை அந்த அணி  2.2 ஓவர்களில் 11 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  இந்திய அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.  இன்றைய போட்டியில் வென்றால் தான் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edted by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்