2-வது சுற்றில் வோஸ்னியாக்கி வெற்றி

வியாழன், 17 பிப்ரவரி 2011 (13:19 IST)
துபாய் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் ஆட்டங்களில் சக்வடாட்ஸே பாதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் கீழே விழ வோஸ்னியாக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல் செட்டை 6- 1 என்று கைப்பற்றிய வோஸ்னியாக்கி இரண்டாவது செட்டில் 3- 5 என்று பின் தங்கியிருந்தார்.

ஆஸ்ட்ரேலிய ஓபன் இறுதிப் போட்டிவரை வந்து கடைசியில் கிம் கிளைஸ்டர்சிடம் தோற்ற சீன வீராங்கனை லீ நா, யனீன விக்மேயர் என்பவரிடம் தோல்வி தழுவினார்.

7-வது தரநிலையில் உள்ள விக்டோரியா அசரென்கா, ஷுவாய் பெங் என்ற சீன வீராங்கனையை 4- 6, 6- 2, 7- 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்லானா பைரன்கோவாவை போராடி 3 செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்ருக்கு முன்னேறினார்.

சீனாவின் ம்ற்றொரு வீராங்கனையான ஷுவாய் ஜேங் என்பவரை இத்தாலியின் ஷியாவோனி வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்