சென்னையில் ஏப்ரல் 17ஆம் தேதி மாநில கூடைப்பந்து போட்டி தொடக்கம்
ஞாயிறு, 28 மார்ச் 2010 (16:33 IST)
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
எஸ்.ஆர்.எம்-ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 7ஆம் தேதிக்குள் செயலாளர், எஸ்.ஆர்.எம்-ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப், 70, ஜி.டி.அபார்ட்மெண்ட்ஸ், புதுத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியில் தங்கள் அணியின் பெயரை பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 99945 37327 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கிளப் செயலர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.