சாய்னாவின் தங்கக்கனவு தகர்ந்தது; அரையிறுதியில் தோல்வி!

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (15:46 IST)
FILE
லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டு போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் அரையிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வி தழுவினார்.

இதனால் தங்கம், வெள்ளி கனவு தகர்ந்தது. தற்போது வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற வாய்ப்புள்ளது.

உல‌கின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் வாங் யிஹான் என்பவர் 21- 13, 21- 13 என்று எந்த வித சவாலுமில்லாமல் வெற்றி பெற்றார்.

நேற்று காலிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா இன்று பெட்டிப்பாம்பாக சரணடைந்தது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகும்.

அவர் எதிராளியின் ஷாட்டை கணித்து ஆடாமல் விடுவதில் நிறைய தவறுகளைச் செய்தார். தொடர்ந்து செய்தும் வந்தார்.

ஆனால் சீன வீராங்கனை உலகின் நம்பர் 1 வீராங்கனையாவார் இதனால் ஓரளவுக்கு சாய்னாவின் இந்தத் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே.

வெப்துனியாவைப் படிக்கவும்