கிரிக்கெட் செய்தி: ஐ.பி.எல்.- கொச்சி அணி நீக்கம்

செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (11:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டுள்ளது.

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிசிசிஐ-க்கு வங்கி காப்புறுதித் தொகையை அளிக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் 5 சீசனில் கொச்சி டஸ்கர்ஸ் அணி விளையாடாது என்று தெரிகிறது.

÷குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ரூ.156 கோடி வங்கி காப்புறுதியை அளிக்குமாறு கொச்சி அணி நிர்வாகத்துக்கு ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் காப்புறுதித் தொகை அளிக்கப்படாததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து கொச்சி அணி உரிமையாளர்கள் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்