உலக கோப்பை பேட்மின்டன்: நேரடியாக 2வது சுற்றில் நுழைகிறார் சாய்னா

புதன், 22 ஜூலை 2009 (12:00 IST)
ஹைதராபாத்தில் நடைபெற உள்ள உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், நேரடியாக 2வது சுற்றில் நுழையத் தகுதி பெற்றுள்ளார்.

ஆக்ஸ்ட் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை பேட்மின்டன் தொடரில், உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டித் தொடரில் யார், யாருடன் மோதுவது என்ற விவரம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனையும், தரவரிசையில் 6வது இடத்தில் இருப்பவருமான சாய்னா நெவால் நேரடியாக 2வது சுற்றில் (முதல் சுற்றில் ஆடாமல் `பை-ஆர்டர்' வாய்ப்பு மூலம்) விளையாடத் தகுதி பெற்றார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் சேத்தன் ஆனந்த் தனது முதல் சுற்றில் தென்கொரிய வீரர் ஜி ஹூன் ஹாங்கை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் பாத் சீன தைபே வீரர் பையின் யு சிங் சியேவை முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்