உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிரவீண் குமார் சந்தேகம்

செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (16:33 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னமும் 2 வாரங்களே உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் காயத்தின் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல நேரிட்டுள்ளது. இதனால் அவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் திருப்பி அனுப்பப்பட அவர் தற்போது பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இங்கிலாந்தில் அவரது காயம் பற்றிய சோதனைகள் முடிந்த பிறகே அவர் விளையாடுவது உறுதி செய்யப்படவுள்ளது.

ஆனால் பிரவீண் குமார் சிகிச்சை பலனளிக்கத் துவங்கியுள்ளது. இப்போதைக்கு நலமாகவே உள்ளேன், எப்படியும் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவேன், என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்